கொடுத்த பணத்தை மீட்டெடுக்க முதியவரை கடத்தி காரியத்தை முடித்த பெண்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொடுத்த பணத்தை மீட்டெடுக்க முதியவரை கடத்தி காரியத்தை முடித்த பெண்!


யாழ்ப்பாணத்தில் முதியவர் ஒருவர் கடத்தப்பட்டு அவரது வங்கிக் கணக்கிலிருந்து 15 இலட்சம் ரூபா பெறப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பெண்ணொருவரின் தலைமையில் இந்த துணிகர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காணி விற்பதாக குறிப்பிட்டு வாங்கிய பணத்தை முதியவர் மீள ஒப்படைக்காததையடுத்து அவரை கடத்திச் சென்று கொடுத்த பணத்தை மீளப்பெற்றுள்ளனர்.

அரியாலை, நாயன்மார்கட்டு பகுதியை சேர்ந்த 69 வயதான கணக்காளர் ஒருவரே கடத்தப்பட்டுள்ளார்.

புன்னாலைக்கட்டுவனை சேர்ந்த பெண்ணொருவருக்கு காணியை விற்பதாக குறிப்பிட்டு, ரூ.15 இலட்சம் பெற்றதாகவும், அவர் காணியை விற்காததுடன் பணத்தை மீள வழங்காமல் இழுத்தடித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று மாலை காணி பார்க்க வருவதாக வேறொருவர் மூலம் நாடகமாடி, முதியவரை கல்வியங்காட்டு பகுதிக்கு வரவழைத்துள்ளனர். அங்கு வைத்து முதியவரை வாகனத்தில் கடத்திச் சென்றுள்ளனர்.

முதியவரை தாக்கி, அவர் கொடுக்க வேண்டிய ரூ.15 இலட்சம் பணத்தையும் அவரது வங்கிக் கணக்கிலிருந்து மீளப்பெற்ற பின்னர், இரவு கல்வியங்காட்டில் இறக்கி விடப்பட்டுள்ளார்.

அவர் நேற்றிரவே இது தொடர்பில் கோப்பாய் பொலிசாரிடம் முறைப்பாடு பதிவு செய்தார்.

கடத்தியது, தாக்கியது ஆகிய இரண்டு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பெண்ணையும், மேலும் 4 பேரையும் பொலிஸார் தேடி வருகின்றனர்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.