மேலுமொடு சொகுசு பஸ் விபத்து; பலர் படுகாயம்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மேலுமொடு சொகுசு பஸ் விபத்து; பலர் படுகாயம்!!


கம்பளை - நுவரெலியா பிரதான வீதியில் ஹெல்பொட எனும் பிரதேசத்தில் சொகுசு பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.


புத்தளத்திலிருந்து - நுவரெலியா நோக்கி பயணித்த குறித்த சொகுசு பஸ் விபத்துக்குள்ளானதில் 08 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புஸ்ஸல்லாவ பொலிஸார் தெரிவித்தனர்.


சுற்றுலாவுக்குச் சென்ற சிலரே விபத்தில் சிக்கியுள்ளனர்.


காயமடைந்தவர்களில் நால்வர் கொத்மலை பிராந்திய வைத்தியசாலையிலும் மேலும் நால்வர் புஸ்ஸல்லாவ வஹுகபிட்டிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புஸ்ஸல்லாவ பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.


சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கத்தால் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளின் ஊடாக தெரியவருகின்றது என்று தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.