வைத்தியசாலைகளின் மின்வெட்டு தொடர்பிலான அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வைத்தியசாலைகளின் மின்வெட்டு தொடர்பிலான அறிவிப்பு!

சுகாதார அமைச்சின் கீழ் உள்ள வைத்தியசாலைகளுக்கு அடுத்த இரண்டு மாதங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை உறுதியளித்துள்ளதாக அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சருக்கும் இ.மி.ச தலைவருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இணக்கப்பாடு எட்டப்பட்டதையடுத்து, உறுதிமொழியை உறுதிப்படுத்தும் கடிதத்தை இலங்கை மின்சார சபை வழங்கியுள்ளதாக டொக்டர் ரத்நாயக்க குறிப்பிட்டார்.

கண்டியில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே கலாநிதி ரத்நாயக்க, திறைசேரியால் ரூ. 120 மில்லியன் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நிலுவையிலுள்ள மின்சாரக் கட்டணங்களைத் தீர்ப்பதற்கு சுகாதார அமைச்சுக்கு வழங்கப்பட்டதாக தெரிவித்தார். 

கடந்த நான்கைந்து மாதங்களாக அரச வைத்தியசாலைகளின் மின் கட்டணத்தை சுகாதார அமைச்சினால் செலுத்த முடியவில்லை.

எவ்வாறாயினும், அடுத்த இரண்டு மாதங்களுக்குள் நிலுவையிலுள்ள கட்டணங்களைத் தீர்ப்பதாக உறுதியளித்ததையடுத்து, அரச மருத்துவமனைகளுக்கான மின் இணைப்பைத் துண்டிக்க வேண்டாம் என்று இ.மி.சபை ஒப்புக்கொண்டது.

எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் நிலுவையில் உள்ள மின்சார சபையின் கட்டணங்களைத் தீர்ப்பதற்கும், ஒவ்வொரு மாதமும் மின்சாரக் கட்டணம் செலுத்தப்படுவதை உறுதிசெய்வதற்கு நிதியை வழங்குவதற்கும் திறைசேரி கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளதாக கலாநிதி சமன் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.