கிரிக்கெட் தொழில்நுட்பக் குழுவில் இருந்து பர்வீஸ் மஹரூப் இராஜினாமா!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கிரிக்கெட் தொழில்நுட்பக் குழுவில் இருந்து பர்வீஸ் மஹரூப் இராஜினாமா!


விளையாட்டு அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் தொழில்நுட்பக் குழுவில் இருந்து இலங்கை அணியின் முன்னாள் வீரர் பர்வீஸ் மஹரூப் ராஜினாமா செய்துள்ளார்.


தற்போது சர்வதேச கிரிக்கெட் வர்ணனையாளராக இருக்கும் மஹரூப், தனது சர்வதேச வர்ணனை பணி மற்றும் குடும்ப பொறுப்புகள் காரணமாக குழுவில் தனது பங்களிப்பை வழங்க முடியவில்லை என்று விளையாட்டு அமைச்சரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.


மஹரூப் கடந்த ஏப்ரல் 2023 இல் தொழில்நுட்பக் குழுவிற்கு நியமிக்கப்பட்டார். இந்த குழு இலங்கை கிரிக்கெட் தொடர்பான விடயங்களில் விளையாட்டு அமைச்சருக்கு ஆலோசனை வழங்கும் பணியை கொண்டுள்ளது.


இந்த குழுவின் மற்ற உறுப்பினர்களில் முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர்களான சனத் ஜெயசூரிய, சரித் சேனாநாயக்க மற்றும் அசந்த டி மெல் ஆகியோர் அடங்குவர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.