போத்தலில் தனது சிறுநீரை நிறைத்து தாக்கிய பஸ் ஓட்டுநர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

போத்தலில் தனது சிறுநீரை நிறைத்து தாக்கிய பஸ் ஓட்டுநர் கைது!


தனது சிறுநீரை பிளாஸ்டிக் போத்தலில் நிரப்பி, மற்றொருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று கிடைக்கப் பெற்றிருந்த நிலையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

திவுலபிட்டிய இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸின் சாரதி மீதே, தனியார் பஸ்ஸின் சாரதியால் இவ்வாறு சிறுநீர் தாக்குதல் மினுவாங்கொடை பஸ் நிலையத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால், சாரதிக்கு அண்மையில் உள்ள ஆசனங்களில் அமர்ந்திருந்தவர்கள் மீதும் சிறுநீர் பட்டுத் தெறித்துள்ளது.

குருநாகல் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ், பயணிகளை ஏற்றுவதற்காக மினுவாங்கொடை பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொழும்பில் இருந்து மினுவாங்கொடையை நோக்கி பயணித்த தனியார் பஸ் சாரதியே இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளார். பஸ்ஸை செலுத்திச் சென்றுக்கொண்டிருந்த போது, அவர் மதுபோதையில் இருந்தமை கண்டறிப்பட்டுள்ளது. அதனடிப்படையில், கொழும்பு, கரையோர பொலிஸாரினால் இவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட தனியார் பஸ் சாரதியிடம் வாக்குமூலத்தைப் பெற்றுக்கொண்டு, எதிர்வரும் 09ஆம் திகதியன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கட்டளையிட்ட கரையோர பொலிஸார், அவரை பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளனர்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.