போராட்டத் தளத்தின் மீதான தாக்குதல்; நாமல் உள்ளிட்ட ஏனைய சிலரின் வெளிநாட்டு பயணத்தடை நீக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

போராட்டத் தளத்தின் மீதான தாக்குதல்; நாமல் உள்ளிட்ட ஏனைய சிலரின் வெளிநாட்டு பயணத்தடை நீக்கம்!


காலிமுகத்திடலில் உள்ள 'கோட்டகோகம' போராட்டத் தளத்தின் மீதான தாக்குதல் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த மற்றும் மிலன் ஜயதிலக்க ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை 2023 ஜூலை 19ஆம் திகதி மீள அழைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (ஜூன் 07) உத்தரவிட்டுள்ளது.


இந்த வழக்கு இன்று (07) காலை கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


இந்த வழக்கின் சந்தேகநபர்கள் தொடர்பில் சட்டமா அதிபரினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை சவாலுக்கு உட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் அங்கு நீதிமன்றத்திற்கு அறிவித்தது.


எனவே, அந்த மனு மீதான மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு எதிர்வரும் ஜூன் 23ஆம் திகதி வெளியாகும் எனத் தெரிவித்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர், தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர், குறித்த வழக்கை வேறொரு திகதியில் மீளப்பெறுமாறு நீதவானிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


அதன்படி, வழக்கை ஜூலை 19ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டார்.


சட்டத்தரணிகள் முன்வைத்த உண்மைகளை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், குறித்த வழக்கில் சந்தேகநபர்களாக பெயரிடப்படாத பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட சிலருக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடையை நீக்கவும் உத்தரவிட்டுள்ளது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.