கையடக்கத் தொலைபேசிகளின் விலைகளில் மாற்றம் ஏற்படுமா?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கையடக்கத் தொலைபேசிகளின் விலைகளில் மாற்றம் ஏற்படுமா?

கையடக்கத் தொலைப்பேசிகளின் விலையை 20 சதவீதத்தால் குறைக்க முடியும் என சில சங்கங்கள் கூறினாலும், தற்போது அந்த விலை குறைப்பை நுகர்வோருக்கு வழங்குவது கடினமாகும் என அகில இலங்கை தொடர்பாடல் நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


தற்போதுள்ள கைப்பேசிகள் மற்றும் அதுசார்ந்த உதிரிபாகங்களின் விலையை சுமார் 20 வீதத்தால் குறைக்கவுள்ளதாக இலங்கை கைத் தொலைப்பேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது.


ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளதன் பயனை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக சங்கத்தின் தலைவர் சமித் செனரத் தெரிவித்தார்.


எனினும், இது தொடர்பில் கருத்துரைத்த அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திரஜித் பெரேரா, சாதாரண மக்கள் பயன்படுத்தும் சிறிய ரக கைத் தொலைப்பேசிகள் 1,400 ரூபாவுக்கு வர்த்தக நிலையங்களுக்கு வழங்கப்பட்டு, வர்த்தக நிலையங்களில் 1,600 ரூபாவுக்கு விற்கப்பட்டதாக தெரிவித்தார்.


எவ்வாறாயினும் தற்போது குறித்த தொலைபேசிகள் வர்த்தக நிலையங்களுக்கு 3,800 ரூபாவுக்கு கிடைக்கப் பெறுகின்றன.


இந்நிலையில், இன்று முதல் வர்த்தக நிலையங்களில் தொலைபேசிகளின் விலை குறைக்கப்படும் என நுகர்வோர் எதிர்பார்க்கின்றனர்.


எனினும், வர்த்தக நிலையங்களில் முன்னர் நிலவிய விலைக்கு கொண்டு வரப்பட்ட தொலைபேசிகளே உள்ளன.


இந்நிலையில், வர்த்தக நிலையங்களுக்கு குறைக்கப்பட்ட விலையில் தொலைபேசிகள் கிடைக்கப் பெறுவதில்லை எனவும் அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திரஜித் பெரேரா தெரிவித்தார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.