விமான விபத்தில் சிக்கி 40 நாட்களுக்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்ட 4 சிறுவர்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

விமான விபத்தில் சிக்கி 40 நாட்களுக்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்ட 4 சிறுவர்கள்!


கொலம்பியா விமான விபத்தில் சிக்கிய நான்கு சிறுவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். 

கொலம்பியா நாட்டில் கடந்த மே மாதம் முதலாம் திகதி ஒற்றை என்ஜின் கொண்ட சிறிய ரக விமானம் 06 பயணிகள் மற்றும் விமானி ஒருவருடன் புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் 04 குழந்தைகளும் பயணித்து உள்ளனர்.

இந்நிலையில், திடீரென விமானம் விபத்தில் சிக்கியது. என்ஜினில் பழுது ஏற்பட்டு கட்டுபாட்டை இழந்த நிலையில், விமானி அவசர நிலையை அறிவித்துள்ளார்.

இதன்பின் விமானம் வன பகுதிக்குள் விழுந்து நொறுங்கி உள்ளது. இதனால், அதனை கண்டறிவதில் மீட்பு குழுவினருக்கு சிரமம் ஏற்பட்டது.

எனினும், 40 நாட்களாக விமானம் விழுந்த அமேசான் வனப் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடந்தது.

இதில், விமானத்தில் பயணித்த விமானி, சிறுவர்களின் தாயார் உள்பட 03 பெரியவர்கள் உயிரிழந்ததாக கருதப்பட்டனர்.  இந்நிலையில், அதில் பயணித்த சிறுவர்கள் 04 பேர் உயிருடன் இருந்து உள்ளனர். பின்னர் அவர்கள் மீட்கப்பட்டனர்.

இதுபற்றி கொலம்பியாவின் அதிபர் கஸ்டாவோ பெட்ரோ தெரிவிக்கையில், இந்த சிறுவர்கள் தப்பி பிழைத்தவர்களுக்கான எடுத்துக்காட்டாக உள்ளனர். இந்த சம்பவம் வரலாற்றில் இடம்பெறும் என கூறியுள்ளார்.

விபத்தில் மீட்கப்பட்ட குழந்தைகளில் 11 மாத குழந்தை மற்றும் 04 வயது சிறுவனும் அடங்குவார்கள். அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.