விமான நிலையத்தில் தானியங்கி குடிவரவு, குடியகல்வு கட்டமைப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

விமான நிலையத்தில் தானியங்கி குடிவரவு, குடியகல்வு கட்டமைப்பு!


கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகைத்தரும் மற்றும் வெளியேறும் பயணிகளுக்கு வினைத்திறனான சேவையை வழங்குவதற்காக, தானியங்கி குடிவரவு, குடியகல்வு முகாமை கட்டுப்பாட்டு கட்டமைப்பை அமைப்பதற்காக சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றுடன் உடன்படிக்கையொன்று கைசாத்திடப்பட்டுள்ளது.


அதன்படி, முதற்கட்டமாக பயணிகள் வெளியேறும் முனையத்தில், இரண்டு தானியங்கி குடிவரவு, குடியகல்வு முகாமை கட்டுப்பாட்டு கருமப்பீடங்கள் அமைக்கப்படவுள்ளன.


எட்டு மாதங்களின் பின்னர், பயணிகள் வருகை முனையத்தில் இரண்டு கருமப்பீடங்கள் நிறுவப்படவுள்ளன.


இதற்கு தேவையான அடிப்படை வசதிகளை குடிவரவு, குடியகல்வு திணைக்களம் வழங்கவுள்ளதுடன், இதற்கான நிதியை வரையறுக்கப்பட்ட விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம் வழங்கவுள்ளது.


உலகலாவிய ரீதியில் உள்ள பெரும்பாலான விமான நிலையங்களில், தானியங்கி குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டு கட்டமைப்பு தொழிற்படுவதுடன், அதற்காக சிங்கப்பூர் நிறுவமொன்றின் தயாரிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.