பத்து வயது மாணவி சிகரெட்டினால் சூடு வைக்கப்பட்டு கொடூர பாலியல் துஷ்பிரயோகம்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பத்து வயது மாணவி சிகரெட்டினால் சூடு வைக்கப்பட்டு கொடூர பாலியல் துஷ்பிரயோகம்!!


கொழும்பில் உள்ள பிரபல மகளிர் கல்லூரி ஒன்றில் கல்வி கற்கும் பத்து வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததுடன் சிறுமியின் உடலின் சில இடங்களில் சிகரெட்டினால் சூடுவைத்த சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் நேற்று (22) நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.


இந்த வருடம் புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள சிறுமியை கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை அளிக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சிறுமி தொடர்பில் வெல்லம்பிட்டி பொலிஸாரால் பெறப்பட்ட சட்ட வைத்திய அறிக்கைகள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன. 


மருத்துவ அறிக்கைகளை கருத்தில் கொண்டு, சிறுமியை அவரது தாயின் பராமரிப்பில் வைத்தியசாலையில் சேர்க்க நீதிமன்றம் உத்தரவிட்டது.


பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட மாணவியின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதைக் கண்ட வகுப்பு ஆசிரியர் சிறுமியை வெல்லம்பிட்டி பொலிஸாரிடம் அழைத்துச்சென்றார்.


இதன்படி, சிறுமியை சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, சிறுமி எட்டு தடவைகள் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.