பெண் சுற்றுலா பயணி ஒருவரை பாலியல் துன்புறுத்தல் செய்த 19 வயது இளைஞன் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பெண் சுற்றுலா பயணி ஒருவரை பாலியல் துன்புறுத்தல் செய்த 19 வயது இளைஞன் கைது!


ஹபராதுவ பௌத்த விகாரை ஒன்றில் உக்ரேனிய பெண் சுற்றுலாப் பயணி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். 


சந்தேக நபர் உனவட்டுன பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், கடந்த புதன்கிழமை (21) குறித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாகவும் லங்காதீப தெரிவித்துள்ளது .


உனவடுனவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருக்கும் சுற்றுலாப் பயணி ஹபராதுவ பௌத்த விகாரைக்கு வழமையாக செல்வதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


சந்தேக நபர் போதி மரத்தை வழிபட்டுக் கொண்டிருந்த பெண்ணை அணுகி விகாரையின் மற்றுமொரு பகுதியில் வழிபடுமாறு அழைத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 


சந்தேகநபரின் அழைப்பின் பேரில் குறித்த பகுதிக்கு சென்ற பெண் அங்கிருந்து வெளியேறும் போது அவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளார்.


சம்பவத்தின் பின்னர் சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர். (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.