மின்கட்டணங்களை குறைக்க தீர்மானம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மின்கட்டணங்களை குறைக்க தீர்மானம்!


நாட்டில் மின்சார கட்டணங்களை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.


இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், மின்சார கட்டணங்கள் 03 சதவீதத்தினால் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக மின்சார கட்டணத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான யோசனை ஒன்றை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபையிடம் முன்வைத்திருந்தது.


எனினும், அந்த ஆணைக்குழுவின் தலைவர் பதவி விலகியதையடுத்து, குறித்த கட்டண திருத்தத்தை அமுல்படுத்துவதில் சிக்கல் நிலவியது.


இந்த சிக்கல் தொடருமானால், தற்போது அமுலில் உள்ள கட்டணத்தை திருத்தம் இன்றி தொடர்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை அறிவித்திருந்தது.


இந்நிலையில், அண்மையில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் எம்.ஏ.ஆர்.எம் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டார்.


இதனையடுத்தே, மின்கட்டணத்தில் திருத்தத்தை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.