'நான் ஒரு ஆணாக வாழ விரும்புகிறேன்' என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட 14 வயது சிறுமி! #இலங்கை

advertise here on top
Join YazhNews WhatsApp Community

'நான் ஒரு ஆணாக வாழ விரும்புகிறேன்' என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட 14 வயது சிறுமி! #இலங்கை


"நான் ஓர் ஆண்பிள்ளை போல, சிறுவனை போல வாழ ஆசைப்படுகிறேன்" என கடிதம் எழுதிவைத்துவிட்டு, 14 வயது சிறுமியொருவர் தற்கொலை செய்துகொண்ட பரிதாபகரமான சம்பவம் இலங்கையில் இடம்பெற்றுள்ளது.


இந்த 14 வயது மாணவியின் சடலம் மீட்கப்பட்ட அறையில் கடிதமொன்று காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில், குறித்த சிறுமி, ஒரு சிறுவனைப் போல நடந்துகொள்வார் என்றும் அவரது அந்த இயல்பினை மாற்றிக்கொள்ள வேண்டும் என உறவினர்கள் சிறுமிக்கு அழுத்தம் கொடுத்துள்ள நிலையிலேயே அவள் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


சிறுமி அக்கடிதத்தை தனது தாயாருக்கு எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.


அந்த கடிதத்தில் சிறுமி, 


நான் ஆணாக, சிறுவனாக வாழவே ஆசைப்படுகிறேன். ஒரு பெண்ணாக வாழ்வதை நினைத்து நான் கவலைப்படுகிறேன். 


ஒரு பெண்குழந்தையாக பிறந்து வாழ்வது எனக்கு கவலையளிக்கிறது. நான் ஓர் ஆணை போல வாழ விரும்புகின்றேன். ஆனால், அதற்கு அனுமதிக்கின்றார்கள் இல்லை.


தாக்கப்பட்ட சிறுமியாக வாழ்வது குறித்து நான் கவலையடைகிறேன்.


நான் வீட்டிலும் பாடசாலையிலும் ஒரு பெண்பிள்ளை போல வாழ வேண்டியுள்ளது. ஒரு ஆண்பிள்ளையாக நான் இல்லாதது எனக்கு கவலையளிக்கிறது என எழுதியுள்ளார்.


அத்தோடு, அச்சிறுமி தான் தொலைக்காட்சிகளில் பார்த்த கொரிய நடிகர் மீது பெரும் விருப்பத்தை கொண்டிருந்தார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.