நாட்டில் முதலாவது மிதக்கும் சூரிய சக்தி அபிவிருத்தி செயற்திட்ட உடன்படிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் முதலாவது மிதக்கும் சூரிய சக்தி அபிவிருத்தி செயற்திட்ட உடன்படிக்கை!

இலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய சக்தி அபிவிருத்தி செயற்திட்டத்திற்காக கொரிய தொழில்நுட்ப அபிவிருத்திக்கான நிறுவனத்துடன் மின்சக்தி அமைச்சு நேற்று (31) உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது.

இது தொடர்பாக ட்விட்டர் பதிவொன்றை இட்டுள்ள விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர, நிலைபெறுதகு வலு அதிகார சபைக்கு 5.2 மில்லியன் டொலர்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

சப்ரகமுவ மாகாணத்தில் சந்திரிகா குளம் மற்றும் ஊவா மாகாணத்தின் கிரிஇப்பன்ஆர குளத்திற்கு அருகாமையில் கொரிய பொறியியல் நிறுவனத்தினால் மிதக்கும் சூரிய சக்தி அபிவிருத்தி செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த அபிவிருத்தித் திட்டத்தை அடுத்த வருடம் டிசம்பர் மாதத்தில் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.