எரிபொருள் ஒதுக்கீடு குறித்த முக்கிய தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எரிபொருள் ஒதுக்கீடு குறித்த முக்கிய தகவல்!

தற்போது அமுலிலுள்ள எரிபொருள் QR கோட்டாவில் எவவித மாற்றமும் செய்யப்பட மாட்டாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.


வாராந்தம் விநியோகிக்கப்படும் எரிபொருளின் அளவை மாற்றமின்றி பேணவுள்ளதாக எரிசக்தி அமைச்சின் உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.


கையிருப்பில் உள்ள எரிபொருள் மற்றும் கொள்வனவிற்கான இயலுமை உள்ளிட்ட விடயங்களை கருத்திற்கொண்டு எரிபொருள் கோட்டா முறையில் மாற்றம் ஏற்படுத்தாதிருக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.


நாட்டின் எரிபொருள் சந்தையில் ஏனைய சர்வதேச நிறுவனங்களின் முதலீடுகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், தற்போது அமுலிலுள்ள எரிபொருள் கோட்டா முறையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படக்கூடுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.