advertise here on top
Join yazhnews Whatsapp Community

வீட்டுக்கே சென்று ஆசிரியரை தாக்கிய மாணவர்கள்!


புத்தளம் பகுதியில் ஆசிரியர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் பாடசாலை மாணவர்கள் ஐவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


கல்விப் பொதுத் தராதர பத்திர சாதாரண தரத்திற்கு தோற்றவுள்ள ஐந்து மாணவர்களிடமே இவ்வாறு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


நேற்றைய தினம் குறித்த ஐந்து மாணவர்களையும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் தொடர்பில் ஆசிரியர் கண்டித்துள்ளார்.


இந்நிலையிலேயே நேற்று மாலை ஆசிரியரின் வீட்டிற்கு சென்ற மாணவர்கள் ஆசிரியரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சில மாணவர்கள் தலைமறைவாகியுள்ளதுடன் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.