தம்பதியினர் மீதான துப்பாக்கிச் சூட்டில் 38 வயது நபர் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தம்பதியினர் மீதான துப்பாக்கிச் சூட்டில் 38 வயது நபர் பலி!


ஹபரதுவ, பொல்துவ பன்சல பகுதியில் இன்று (24) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 38 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


மேலும் உயிரிழந்தவரின் மனைவி என அடையாளம் காணப்பட்ட பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


தங்கள் குழந்தையை பாடசாலையில் விட்டுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த தம்பதியினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 


முச்சக்கர வண்டியில் பயணித்த தம்பதிகள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. 


சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.