மதுபான கடைகள் குறைந்தது 10 மணி வரையாவது திறந்திருக்க வேண்டும்! -டயானா

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மதுபான கடைகள் குறைந்தது 10 மணி வரையாவது திறந்திருக்க வேண்டும்! -டயானா


மதுவரிக்காக மதுபானக் கடைகள் குறைந்தது காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையாவது திறந்திருக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தெரிவித்தார்.


மதுபான கடைகள் இரவு 9.00 மணிக்கே மூடப்படுவதால் சில பில்லியன் ரூபாய் வருமான இழப்பு ஏற்படுவதாக அவர் பாராளுமன்றத்தில் நேற்று (23) தெரிவித்தார்.


அரசாங்கம் மது வரியை விதித்தாலும் மீண்டும் அதை வசூலிக்க எவ்வித வழிகளும் இல்லை. மதுபானத்தை விற்றால் மட்டும் தான் அதை மீள வசூலிக்க முடியும். மதுபான கடைகள் மற்றும் உணவகங்கள் இரவு பத்து மணிவரையாவது திறந்திருக்கப்பட வேண்டும்.


அப்படியே 9.00 மணிக்கு மதுக்கடைகளை மூடினால் கூட, மதுவை வாங்க வேண்டுமென நிரனப்பவர்களுக்கு 9.00 மணிக்குப் பின் அதை எங்கு எப்படி வாங்க வேண்டும் என்பது தெரியும்”, என அவர் மேலும் தெரிவித்தார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.