advertise here on top
Join yazhnews Whatsapp Community

வாகனங்களுக்கான QR எரிபொருள் ஒதுக்கீட்டில் அதிகரிப்பு - முழு விபரம்

புத்தாண்டு பண்டிகை காலத்திற்காக தற்போதுள்ள எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளது. முன்பு திட்டமிட்டபடி, பண்டிகைக் காலத்திற்கான அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப, தேவையான எரிபொருள் இருப்புகளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஆர்டர் செய்து பெற்றுக் கொண்டது.

விளம்பரம்

முச்சக்கர வண்டிகள் 5 லீட்டரில் இருந்து 8 லீட்டரில் ஆகவும், மோட்டார் சைக்கிள்கள் 4 லீட்டரில் இருந்து  7 லீட்டர் ஆகவும், பஸ்கள் 40 லீட்டரில் இருந்து 60 லீட்டராகவும், கார்கள் 20 லீட்டரில் இருந்து 30 லீட்டராகவும், மற்றைய வாகனங்கள் 15 லீட்டரில் இருந்து 25 லீட்டராகவும், லொரிகள் 50 லீட்டரில் இருந்து 75 லீட்டர்காவும், குவாட்ரிக் சைக்கிள்கள் 4 லீட்டரில் இருந்து 6 லீட்டர் ஆகவும் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. 

சிறப்பு நோக்கத்திற்கான வாகனங்கள் 20 லீட்டர் இல் இருந்து 30 லீட்டராகவும், வேன்கள் மற்றும் 20 லீட்டர் இல் இருந்து முதல் 30 லீட்டர் ஆகவும்  அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.  (யாழ் நியூஸ்)

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.