உலக வங்கியின் தெற்காசியாவிற்கான துணைத் தலைவருக்கும் அரச நிதி அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உலக வங்கியின் தெற்காசியாவிற்கான துணைத் தலைவருக்கும் அரச நிதி அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

 பாதிக்கப்படக்கூடிய குழுக்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட சீர்திருத்தங்கள் உட்பட அனைத்து விஷயங்களும் வெளிப்படைத்தன்மையுடன் செய்யப்பட வேண்டும் என்று உலக வங்கியின் தெற்காசியாவிற்கான துணைத் தலைவர் மார்ட்டின் ரேஸர் தெரிவித்துள்ளார். 

வாஷிங்டனில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் சந்திப்புகளுக்கு இடையில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிற்கும் மார்ட்டின் ரேஸருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதுடன், அவர் தனது டுவிட்டர் பதிவில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் ஏற்றுமதி அடிப்படையிலான சிறு மற்றும் நடுத்தர வர்த்தகங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதாக டுவிட்டர் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.