advertise here on top
Join yazhnews Whatsapp Community

இலங்கைக்கு கடன் வழங்கிய தனியார் கடன் வழங்குநர்களின் புதிய முன்மொழிவு!

இலங்கைக்கு கடன் வழங்கிய தனியார் கடன் வழங்குநர்கள் கடன் மறுசீரமைப்பு தொடர்பான முதல் யோசனையை இலங்கை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, அவர்கள் வைத்திருக்கும் பத்திரங்களின் மதிப்பு 12 பில்லியன் டொலர்கள் என ராய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

கடன் மறுசீரமைப்பு முன்மொழிவு தொடர்பாக எந்தத் தகவலும் வெளியிடப்படாது என்றும் அதில் 30 கடனாளர்களைக் கொண்ட குழு உள்ளடங்குவதாகவும் அறிக்கை கூறுகிறது.

கடன் மறுசீரமைப்பு முன்மொழிவு பற்றி கலந்துரையாட பத்திரதாரர்களும் அரசாங்க அதிகாரிகளும் வாஷிங்டனில் சந்தித்ததாகவும், இரு தரப்பிலிருந்தும் சட்ட மற்றும் நிதி ஆலோசகர்கள் வந்திருப்பதாகவும் ராய்ட்டர்ஸ் மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.