ஜப்பான் பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் குண்டு வீச்சு.. பெரும் பதற்றம்..

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜப்பான் பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் குண்டு வீச்சு.. பெரும் பதற்றம்..

அப்போது ஷின்சோ அபேவை முன்னாள் கடற்படை வீரர் ஒருவர் சுட்டுக்கொன்றார். உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை இந்த சம்பவம் ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், ஜப்பானில் மீண்டும் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் விதமாக ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் அவரை நோக்கி வெடி குண்டு வீசப்பட்டுள்ளது.

ஜப்பானின் வடக்கு பகுதியில் உள்ள வகயமா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா உரையாற்றிக் கொண்டு இருந்தார். அப்போது அவரை நோக்கி கூட்டத்தில் பங்கேற்று இருந்த நபர் பைப் வெடி குண்டை வீசினர். இந்த வெடிகுண்டு வெடித்ததி பொதுக்கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பகுதி முழுவதுமாக கரும்புகை சூழ்ந்தது.

அதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதல் முயற்சியில் இருந்து காயம் எதுவும் இன்றி ஜப்பான் பிரதமர் உயிர் தப்பினார். ஜப்பான் பிரதமரை உடனடியாக பாதுகாப்பு படையினர் பத்திரமாக அழைத்து சென்றனர். பொதுக்கூட்டத்தில் குண்டு வெடித்ததும் கூட்டத்தில் பங்கேற்று இருந்த மக்கள் அலறியடித்து அச்சத்தில் ஓட்டம் பிடித்தனர். குண்டு வீசிய நபரை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.