குழந்தையை ரயிலில் விட்டுச் சென்ற சம்பவம்; சந்தேநபர்களுக்கு திருமணம்?

advertise here on top
Join yazhnews Whatsapp Community

குழந்தையை ரயிலில் விட்டுச் சென்ற சம்பவம்; சந்தேநபர்களுக்கு திருமணம்?


அண்மையில் மட்டக்களப்பு நோக்கி செல்லவிருந்த புகையிரதத்தின் மலசலகூடத்தில் விடப்பட்ட சிசுவை பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே, கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளரிற்கு இன்று (17) உத்தரவிட்டுள்ளார்.

பிணை வழங்கப்பட்டதன் பின்னர் இளம் தம்பதியினருக்கு இன்றே திருமணம் நடைபெறவுள்ளதாகவும் அதன் பின்னர் குழந்தையை பொறுப்பேற்க தயாராக இருப்பதாகவும் சந்தேகநபர்கள் சார்பில் நீதிமன்றில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி தெரிவித்தார்.

இதையடுத்து, குழந்தையை ஒப்படைக்கும் உத்தரவை நீதிபதி வழங்கினார்.

டிஎன்ஏ பரிசோதனைக்காக குழந்தை மற்றும் சந்தேகநபர் தம்பதியை 21ஆம் திகதி காலை 9.00 மணிக்கு அரசு பரிசோதகர் முன் ஆஜராகுமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

சந்தேகத்திற்குரிய இளம் தம்பதிகளை தலா 5 லட்சம் ரூபாய் இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.