![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikrgHg6ZdePdc11JQBhVgrjU-sijqZ4L4xUy2ja1sUE_5JBN0C_1nbQ-g9UV382ntNQdR_-5ukhYW41AAD1S3zuq0HOhbIeDIyKeLO_i5IVznJdXgpJvaAB09x-Bgh5s5liBNTCC2vRRQwuhPyaR7EaUZe1VV9ai99KYZ3OC_lAuBtpQ9nGPKdjMmr/s16000/travel-ban--Booru-Muna-L.jpg)
உள்நாட்டில் இடம்பெற்ற பல கொலை சம்பவங்கள் மற்றும் ஏனைய குற்றச் செயல்கள் தொடர்பில் தேடப்பட்டு வரும் 'பூரு முனா' எனப்படும் ரவிந்து சங்க டி சில்வா அவிசாவளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று (17) பிற்பகல் அவிசாவளை நீதிமன்ற வளாகத்திற்கு அருகிலுள்ள வீதியில் காரில் காத்திருந்த போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேல்மாகாண தெற்குப் பிரிவு பொலிஸாரினால் சந்தேகநபருக்கு எதிராக அவிசாவளை நீதிமன்றத்தினால் வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டது.
2022 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் திகதி ஹன்வெல்ல பிரதேசத்தில் உணவகம் ஒன்றின் உரிமையாளரை சுட்டுக் கொன்றதாக 'பூரு முனா' மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சந்தேக நபர் 2023 பெப்ரவரி 24 ஆம் திகதி வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார், ஆனால் விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார், பின்னர் அவர் விமான நிலையத்தில் இருந்து தப்பிச் செல்ல இரண்டு பௌத்த பிக்குகள் உதவியிருந்தனர்.
28 வயதுடைய சந்தேகநபர் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பல கொலைகளில் பிரதான துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதேநேரம், சந்தேக நபருக்கு அடைக்கலம் வழங்கிய ஹொரணை, மில்லனிய பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதியும் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)