பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வது தொடர்பிலான அறிவித்தல்!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வது தொடர்பிலான அறிவித்தல்!


அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை ஆசிரியர்களாக பணியில் இணைத்துக் கொள்வதற்கான பரீட்சைகளை நடத்துவதற்கு பரீட்சை திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


நாடு முழுவதும் உள்ள 341 பரீட்சை மையங்களில் எதிர்வரும் 25ஆம் திகதி இந்த பரீட்சை நடத்தப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


இந்த பரீட்சைக்கான அனுமதி அட்டைகளை பரீட்சார்த்திகளுக்கு அனுப்புவதற்குத் தேவையான ஏற்பாடுகளை பரீட்சை திணைக்களம் செய்துள்ளது.


இந்த பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், தேசிய மற்றும் மாகாண பள்ளிகளில் வெற்றிடமாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தேவையான பட்டதாரிகளின் எண்ணிக்கை கணக்கிட்டு, அதன் அடிப்படையில் ஆட்சேர்ப்பு நடத்தப்படுமென கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.