மேல் மாகாண பாடசாலை தவனைப் பரீட்சை ஒத்திவைப்பு!!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

மேல் மாகாண பாடசாலை தவனைப் பரீட்சை ஒத்திவைப்பு!!


மேல் மாகாணத்தில் நாளை (15) நடத்த திட்டமிடப்பட்டிருந்த சில தரங்களுக்கான தவணைப் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன.


மேல் மாகாண கல்வித் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, 9, 10 மற்றும் 11ஆம் தரங்களுக்கான, தவணைப் பரீட்சை இவ்வாறு பிற்போடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில், குறித்த பரீட்சைகள் எதிர்வரும் 21 மற்றும் 22ஆம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண கல்வித் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.


நாளைய தினம் ஆசிரியர் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்புக்கு ஆயத்தமாகும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.