இலங்கை கிரிக்கட் சபையின் அடுத்த உத்தியோகபூர்வ தேர்தல் திகதி வெளியானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை கிரிக்கட் சபையின் அடுத்த உத்தியோகபூர்வ தேர்தல் திகதி வெளியானது!

2023-2025 காலப்பகுதிக்கான புதிய உத்தியோகபூர்வ சபையை நியமிப்பதற்காக இலங்கை கிரிக்கெட்டின் உத்தியோகபூர்வ தேர்தல் மே 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதன்படி, இலங்கை கிரிக்கட் உத்தியோகபூர்வ தேர்தலுக்கான கடந்த 27 ஆம் திகதி வேட்புமனுக்களை மூவரடங்கிய உத்தியோகபூர்வ தெரிவுக்குழு ஏற்றுக்கொண்டதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மாலணி குணரத்ன, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஷிரோமி பெரேரா, இலங்கை நிர்வாக சேவையின் ஓய்வுபெற்ற சிரேஷ்ட சிவில் ஊழியர் சுனில் சிறிசேன ஆகியோர் இந்த மூவரடங்கிய தெரிவுக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.