இன்று நாடளாவிய ரீதியில் பணி பகிஸ்கரிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்று நாடளாவிய ரீதியில் பணி பகிஸ்கரிப்பு!

அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிரான போராட்டம் உள்ளிட்ட பல விடயங்களை முன்னிறுத்தி இன்று (01) பாரிய ஒரு நாள் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள பல துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

துறைமுகம், பெட்ரோலியம், மின்சாரம், நீர், வங்கி, பல்கலைக்கழகம் மற்றும் தொலைத்தொடர்பு தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தத்தில் இணைந்துள்ளதோடு மேலும் பல தொழிற்சங்கங்களும் இதற்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.

இதன்படி வேலைநிறுத்தத்தில் ஈடுபடாமல் பிராந்திய ரீதியில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளதுடன் தபால் மற்றும் ஆசிரியர் சங்கங்களும் இந்த பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கு பதிலாக ஆடைகளில் கறுப்பு பட்டை அணிந்து ஆதரவு வழங்குகின்றனர்.

அத்துடன், பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்குப் பதிலாக போராட்டத்தை நடாத்துவதன் மூலம் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தமது ஆதரவைத் தெரிவிக்க புகையிரத தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளதுடன், இதன் காரணமாக ரயில்கள் தாமதமாகச் செல்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.