உள்நாட்டில் பல்கலைக்கழக வெற்றிடங்கள் குறித்து வெளியான தகவல்!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

உள்நாட்டில் பல்கலைக்கழக வெற்றிடங்கள் குறித்து வெளியான தகவல்!


இவ் ஆண்டுக்கான பல்கலைக்கழக வெற்றிடங்கள் எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்யப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


க. பொ. த உயர்தர பரீட்சை மீள் மதிப்பீட்டு முடிவுகளின் பின்னர் பல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்பங்களும் அங்கு பரிசீலிக்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.


புதிய கல்வியாண்டுக்கான மருத்துவ பீடங்கள், கலை பீடங்கள் உட்பட பல பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், இந்த ஆண்டுக்கான பல்கலைக்கழக வெற்றிடங்கள் எத்ர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்யப்படும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.


தற்போது 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர தர பரீட்சை நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.