தபால் மூல வாக்குச் சீட்டுகள் தொடர்பில் அரசாங்க அச்சுத் திணைக்கள் விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தபால் மூல வாக்குச் சீட்டுகள் தொடர்பில் அரசாங்க அச்சுத் திணைக்கள் விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பு!

தபால் வாக்குச் சீட்டுகள் அச்சிடுவது நிறுத்தப்பட்டபோது, ​​இந்த ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான 50% தபால் வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டதாக அரசாங்க அச்சுத் திணக்களம் தெரிவித்துள்ளது.

வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு சுமார் 400 மில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும், இதுவரை 40 மில்லியன் ரூபாவே தேர்தல்கள் ஆணைக்குழுவிடமிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் பிரதித் தலைவர் நுவான் புத்திக தெரிவித்தார்.

ஒரு அரச நிறுவனத்திடம் இருந்து மற்றுமொரு அரச நிறுவனத்திற்கு சேவைகளை வழங்குவதில் பணம் இல்லாவிட்டால், அது செய்யப்படாது என அரசாங்கம் சுற்றறிக்கை விடுத்துள்ளதாகவும், அச்சிடுவதற்கு மீதி 360 மில்லியன் ரூபா செலவழிக்கப்படுவதற்கு யார் பொறுப்பேற்பது என்பதில் சிக்கல் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.