படகு கவிழ்ந்து மாணவர்கள் உட்பட நால்வர் உயிரிழந்த சோகம்!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

படகு கவிழ்ந்து மாணவர்கள் உட்பட நால்வர் உயிரிழந்த சோகம்!


கொக்கட்டிச்சோலை – தாந்தாமலை பகுதியில் உள்ள குளத்தில் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போன மாணவர்கள் மூவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.


களுமுந்தன்வெளி பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் பயிலும் மாணவர்கள் குறித்த பகுதிக்கு ஆசிரியரொருவருடன் இன்று (12) பிற்பகல் சென்றிருந்தனர்.


இதன்போது, கொக்கட்டிச்சோலை – தாந்தாமலை பகுதியில் உள்ள குளத்தில் இவர்கள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆசிரியர் உயிரிழந்திருந்ததுடன், மூன்று மாணவர்களும் காணாமல் போயிருந்தனர்.


இதனையடுத்து, காணாமல் போன மாணவர்களை மீட்பதற்காக பிரதேச மக்களுடன் இணைந்து காவல்துறையினர் முன்னெடுத்த தேடுதல் பணிகளின் போதே குறித்த மூன்று மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.