இலங்கை மகளிர் கிரிக்கட் அணி இரண்டவாது வெற்றியினையும் தனதாக்கியது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை மகளிர் கிரிக்கட் அணி இரண்டவாது வெற்றியினையும் தனதாக்கியது!

2023 மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியின் 5வது போட்டியில் இலங்கை மகளிர் அணி பங்களாதேஷை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியை பதிவு செய்தது.

127 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை மகளிர் அணி 18.2 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 126 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சார்பாக சமரி அத்தபத்து 15 ஓட்டங்களையும், விஷ்மி குணரத்ன ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, ஹர்ஷிதா சமரவிக்ரம மற்றும் நிலக்ஷி டி சில்வா ஆகியோர் 79 பந்துகளில் 104 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றனர்.

ஹர்ஷிதா 50 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 8 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 69 ரன்கள் எடுத்தார். நிலாக்ஷி ஆட்டமிழக்காமல் 41 ரன்கள் (38) எடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை மகளிர் அணி இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் குழு ஏ இல் முன்னேறியது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.