கல்வி அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவித்தல்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கல்வி அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவித்தல்!!


அடுத்த வருடம்  முதல் 6 - 13 வரையான தரங்களுக்குரிய அனைத்து பாடத்திட்டங்களும் புதுப்பிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.


கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


அதன்படி, செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) பாடத்தை எட்டாம் தரத்தில் இருந்து ஆரம்பிப்பது தொடர்பிலான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.


மேலும் தெரிவித்த அவர், இளைஞர்களின் எதிர்காலம் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் அடங்கியுள்ளது.


செயற்கை நுண்ணறிவு பாடம் ஒரு விருப்பப் பாடமாக அல்லது பிரதான பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும். மாணவர்கள் அந்த பாடத்தை தகவல் தொழில்நுட்ப (IT) பாடங்களுடன் படிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.


இந்த அனைத்து கல்வி மாற்ற செயல்முறைகளுக்கும் அடிப்படையான கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் கொள்கைக்கு இரண்டு வாரங்களில் அமைச்சரவை அமைச்சர்களின் ஒப்புதல் பெறப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.