மின்சாரக் கட்டண அதிகரிப்புடன் ஒப்பிடும் போது, நீர் கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளதுடன், நீர் விநியோகத்திற்காக அதிகளவு மின்சாரம் செலவிடப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குடிநீர் வினியோகத்தில் பம்பிங் செய்யும் பணிக்கு அதிக அளவு மின்சாரம் தேவைப்படுவதால், மின் கட்டணத்தை உயர்த்தினால், அதற்கேற்ப குடிநீர் கட்டண உயர்வை தடுக்க முடியாது என்று அதிகாரி மேலும் கூறினார்.
(யாழ் நியூஸ்)