ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் ஜனாதிபதி மாளிகை, பிரதமர் இல்லம் மற்றும் “விசும்பாய” என்பன தகவல் தொழில்நுட்பத்தை ஆங்கிலத்தில் இலவசமாக கற்பிக்கும் சர்வதேச கல்வி நிறுவனங்களாக மாற்றப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் திரு.சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மேலும் ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட நிர்வாக கட்டிடங்கள் ஸ்ரீ ஜயவர்தனபுரவிற்கு மாற்றப்படும் எனவும், வங்குரோத்து நாடுகளுக்கு மாளிகை அரசியல் தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது ஆட்சியில் ஜனாதிபதி, பிரதமர் மாளிகைகளில் ஆடம்பர அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என்றும் அவர் மேலும் கூறினார்.
வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)
மேலும் ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட நிர்வாக கட்டிடங்கள் ஸ்ரீ ஜயவர்தனபுரவிற்கு மாற்றப்படும் எனவும், வங்குரோத்து நாடுகளுக்கு மாளிகை அரசியல் தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது ஆட்சியில் ஜனாதிபதி, பிரதமர் மாளிகைகளில் ஆடம்பர அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என்றும் அவர் மேலும் கூறினார்.
வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)