எமது ஆட்சியில் ஜனாதிபதி மாளிகையில் கணனி வகுப்பு நடாத்தப்படும் - சஜித்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எமது ஆட்சியில் ஜனாதிபதி மாளிகையில் கணனி வகுப்பு நடாத்தப்படும் - சஜித்

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் ஜனாதிபதி மாளிகை, பிரதமர் இல்லம் மற்றும் “விசும்பாய” என்பன தகவல் தொழில்நுட்பத்தை ஆங்கிலத்தில் இலவசமாக கற்பிக்கும் சர்வதேச கல்வி நிறுவனங்களாக மாற்றப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் திரு.சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மேலும் ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட நிர்வாக கட்டிடங்கள் ஸ்ரீ ஜயவர்தனபுரவிற்கு மாற்றப்படும் எனவும், வங்குரோத்து நாடுகளுக்கு மாளிகை அரசியல் தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது ஆட்சியில் ஜனாதிபதி, பிரதமர் மாளிகைகளில் ஆடம்பர அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என்றும் அவர் மேலும் கூறினார்.

வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.