
2022 - 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சைகள் நாளை (23) முதல் 2,200 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது.
இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு 331,709 பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்கள் தோற்றவுள்ளதாகவும், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வரை பரீட்சை நடைபெறும் எனவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)