எதிர்காலத்தில் தொழில் வல்லுநர்கள் இல்லாத நாடாக இலங்கை - காரணம் இது தான்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எதிர்காலத்தில் தொழில் வல்லுநர்கள் இல்லாத நாடாக இலங்கை - காரணம் இது தான்!

அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கையினால் தொழில் வல்லுநர்கள் இல்லாத நாடாக இலங்கை மாறலாம் என அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, புதிய வரிக் கொள்கையினால் தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போக்கு எதிர்காலத்தில் அதிகரிக்கும் என சங்கத்தின் பொதுச் செயலாளர் கலாநிதி ஜயந்த பண்டார தெரிவித்துள்ளார்.

முன்னைய வரிக் கொள்கையுடன் தாம் இணங்கினாலும் புதிய வரிக் கொள்கையின் ஊடாக தொழில் வல்லுநர்களினால் இவ்வளவு பெரிய வரியை சுமக்க முடியாது எனவும், இந்த வரிக் கொள்கையினால் தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போக்க அதிகமாகும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.  

இந்த நியாயமற்ற வரிக் கொள்கையை திரும்பப் பெறுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்படும் என்றும், அதற்கான போராட்டம் தொடரும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.