மின்கட்டணம் அதிகரிக்கப்படாவிடின் மீண்டும் மக்கள் நீண்ட வரிசைகளில் நிற்கும் நிலைமை ஏற்படும்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மின்கட்டணம் அதிகரிக்கப்படாவிடின் மீண்டும் மக்கள் நீண்ட வரிசைகளில் நிற்கும் நிலைமை ஏற்படும்!!

மின்சார கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் மீண்டும் வரிசை யுகத்திற்கு செல்லும் அபாயம் உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், சமீபத்தில் கட்டண திருத்தம் செய்யப்பட்ட பிறகும் சுமார்   மாதாந்தம் ரூ. 35 பில்லியனே இலங்கை மின்சார சபைக்கு சேர்க்கப்படுகிறது. மேலும் ஜனவரி மாதத்தில் மட்டும் மின்சார விநியோகத்திற்கான நிலக்கரிக்கு ரூ. 38.45 பில்லியன் தேவை என அவர் மேலும் குறிப்பிட்டார். 

மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரியை ஏப்ரல் 25ஆம் திகதிக்கு முன்னதாகக் கொள்முதல் செய்ய வேண்டும், அதன் பிறகு செப்டம்பர் வரை நிலக்கரி இறக்குமதி செய்ய முடியாது என்று அமைச்சர் மேலும் கூறினார்.

க உயர்தரப் பரீட்சைகளின் போது தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு ரூ. 5 பில்லியன் பெறுமதியான எரிபொருள் மேலதிகமாக தேவைப்படுவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 

“கட்டண திருத்தம் என்பது அரசாங்கமோ அமைச்சரோ எடுக்கக்கூடிய கடினமான முடிவாகும். நாங்கள் தேர்தலை சந்திக்கும் நேரத்தில் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏன் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியும்” என்று அவர் மேலும் கூறினார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.