நினைத்தபடி நடக்கவில்லை; வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்புவோருக்கான ஊக்கத்தொகை நிறுத்தம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நினைத்தபடி நடக்கவில்லை; வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்புவோருக்கான ஊக்கத்தொகை நிறுத்தம்!


வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களினால் அனுப்பப்படும் ஒவ்வொரு அமெரிக்க டொலருக்கும் 2 ரூபா ஊக்கத்தொகை வழங்கப்படுவதை இலங்கையின் மத்திய வங்கி ஜனவரி 01 ஆம் திகதி முதல் நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


முறையான வங்கி வலையமைப்புக்களின் மூலம் பணம் அனுப்புவதை ஊக்குவிக்க 2021ஆம் ஆண்டு டிசம்பர் முதல் இந்த ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.


வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் சட்டவிரோதமான ஹவாலா அல்லது உண்டியல் முறைகள் மூலம் பணம் அனுப்பியதை அடுத்தே இந்த முறையை மத்திய வங்கி அறிமுகப்படுத்தியது.


எனினும் எதிர்பார்த்தபடி வெளிநாடுகளின் தொழிலாளர்கள் பணத்தை வங்கிகளின் ஊடாக அனுப்பப்படவில்லை.


இதனையடுத்தே இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு அமெரிக்க டொலர் அனுப்புதலுக்கும் வழங்கப்படும் 2 ரூபாய் ஊக்கத்தொகையை நிறுத்துமாறு வங்கிகளை மத்திய வங்கி கேட்டுக் கொண்டதாக வங்கி ஒன்றின் அதிகாரி தெரிவித்துள்ளார்.


ஊக்கத்தொகையை நிறுத்துவது தொடர்பான மத்திய வங்கியின் உத்தரவு டிசம்பர் 30ஆம் திகதி கிடைத்துள்ளதாகவும், தமது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளதாகவும் வங்கி ஒன்றின் அதிகாரி தெரிவித்துள்ளார்.


கடந்த ஆண்டு 311,269 பேர் வெளிநாட்டு தொழில்களுக்கு சென்றாலும், முன்னைய ஆண்டின் 5.2 பில்லியன் டொலர்களுடன் ஒப்பிடுகையில், தொழிலாளர்கள் சட்டபூர்வமான வலையமைப்புகளின் ஊடாக அனுப்பும் தொகை 36 சதவீதம் சரிந்து 3.3 பில்லியன் டொலராகளாகவே இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.