கஞ்சாவுடன் கைதான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கஞ்சாவுடன் கைதான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்!


மொனராகலை வலயத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் (SSP) சிசிர குமார, கஞ்சா செடிகளுடன் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.


பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அவர் நேற்று (08) இரவு அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.


சந்தேக நபர் கைது செய்யப்பட்ட போது 350 ​​உலர்ந்த கஞ்சா செடிகள் மற்றும் உலோகங்களை தேடும் ஸ்கேனர் இயந்திரத்தையும் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.


கைப்பற்றிய கஞ்சாவின் எடை சுமார் 15 கிலோகிராமத் என அதிரடிப் படையினர் தெரிவிக்கின்றனர்.


இந்த சம்பவம் தொடர்பில் மேலும் 04 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்


கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை மொனராகலை காவல்துறையினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.