சொந்த மகளுக்கு நிகரான சிறுமியை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சொந்த மகளுக்கு நிகரான சிறுமியை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது!


10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஆண் பாடசாலை ஆசிரியர் ஒருவர் ஹொரவ்பத்தானையில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹொரவ்பத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.


சந்தேகநபர் நடத்தும் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்ட வேளையில் குறித்த சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளார். 


சந்தேக நபர் கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தை சேர்ந்த ஆசிரியர் எனவும், 10 வயதுடைய பெண் குழந்தையின் தந்தை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கல்வி வகுப்பின் போது பாதிக்கப்பட்ட சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாகவும், அன்றைய தினம் வகுப்பிலிருந்து வீடு திரும்பியதும் பெற்றோரிடம் தெரிவித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


எவ்வாறாயினும், பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக பெற்றோருக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


துஷ்பிரயோகம் தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து ஹொரவ்பத்தனை பொலிஸார் சந்தேகநபரை நேற்று (08) கைது செய்துள்ளனர். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.