
நாடு முழுவதும் செல்லுபடியாகும் உரிமம் இல்லாத நிறுவனங்கள் விமான டிக்கெட்டுகளை வழங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது என்று இலங்கை சிவில் விமான போக்குவரத்து ஆணையம் (CAASL) இன்று தெரிவித்துள்ளது.
உரிமம் இல்லாமல் விமான டிக்கெட்டுகளை வழங்குவது தண்டனைக்குரிய குற்றமாகும் என்று CAASL பணிப்பாளர் நாயகத்தால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.
இதுபோன்ற பதிவு செய்யப்படாத நிறுவனங்களிடம் இருந்து விமான டிக்கெட்டுகளை வாங்குவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என சிவில் விமான போக்குவரத்து ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதுபோன்ற மோசடி நிறுவனங்களைப் பற்றி எமது ஆணையத்திற்கோ அல்லது அவர்களின் அண்மையில் இருக்கும் காவல் நிலையத்திற்கு தெரிவிக்குமாறு CAASL மேலும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. (யாழ் நியூஸ்)