கொன்று புதைக்கப்பட்ட இரு இளைஞர்கள் - மாவனல்லையில் சம்பவம்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொன்று புதைக்கப்பட்ட இரு இளைஞர்கள் - மாவனல்லையில் சம்பவம்

போதைப்பொருள் விநியோகம் தொடர்பில் பணம் செலுத்தத் தவறியமைக்காக மாவனெல்லையைச் சேர்ந்த இரு இளைஞர்கள், ரம்புக்கன, ஹுரிமலுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் பின்புறம் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளனர் என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

28 மற்றும் 29 வயதுடைய இருவரும் மாவனெல்லை கிரிங்கதெனிய மற்றும் கெரமினிய பிரதேசங்களில் வசிப்பவர்கள் என்றும், அவர்கள் 2022 நவம்பர் 18 மற்றும் 25 ஆம் திகதிகளில் இருந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன இருவரின் பெற்றோர்கள் 2022 டிசம்பர் 7 ஆம் திகதி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர், இதன் போது அவர்கள் தங்கள் பிள்ளைகள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

ரம்புக்கனை, ஹுரிமலுவ பிரதேசத்தில் வசிக்கும் ஒருவரிடம் இருந்து தமது பிள்ளைகள் போதைப்பொருள் கொள்வனவு செய்வதை அறிந்துள்ளதாகவும் பெற்றோர்கள் பொலிஸாரிடம் தெரிவித்திருந்தனர்.

மாவனல்லை பொலிஸாரும் கேகாலை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வீட்டைக் கண்டுபிடித்து, அதன் பின்னர் புதன்கிழமை (11) கேகாலை நீதவான் நீதிமன்றில் உண்மைகளை அறிவித்தனர்.

கேகாலை நீதவான் வாசனா நவரத்ன நேற்று (12) மேற்படி வீட்டுக்குச் சென்றதைத் தொடர்ந்து ஆரம்பகட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இரண்டு இளைஞர்களும் கொலை செய்யப்பட்டு ரம்புக்கனையில் வீட்டின் பின்புறம் இருந்த கோழிக் கூடுக்கு அடியில் புதைக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

போலீசார் இருவரின் உடல்களையும் தோண்டி எடுத்து விசாரணைக்காக நீதித்துறை மருத்துவ அதிகாரிக்கு (JMO) அனுப்பி வைத்தனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.