முன்னாள் ஜனாதிபதியிடம் வாக்குமூலம் பெற நீதிமன்ற உத்தரவு!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முன்னாள் ஜனாதிபதியிடம் வாக்குமூலம் பெற நீதிமன்ற உத்தரவு!!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு, கோட்டை நீதவான் நீதிமன்றம் காவல்துறை விசேட விசாரணை பிரிவிற்கு உத்தரவிட்டுள்ளது.

கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஆர்ப்பாட்டக்காரர்களால், கண்டுபிடிக்கப்பட்டு கோட்டை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு கோடியே 70 இலட்சம் ரூபா பணம் தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பெறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்று (13) கோட்டை நீதிவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த, ஆர்ப்பாட்டக்காரர்களால் இந்த பணத்தொகை கண்டுபிடிக்கப்பட்டது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.