ரயிலில் மோதி காட்டு யானை பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ரயிலில் மோதி காட்டு யானை பலி!

ஹபரணையில் காட்டு யானை ஒன்று இன்று (13) அதிகாலை புகையிரதத்துடன் மோதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இரண்டு காட்டு யானைகளும் சம்பவத்தில் காயமடைந்துள்ளதாக இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது.

ஓடும் ரயிலில் யானைகள் மோதியதில் ஒரு யானை உயிரிழந்துள்ளதுடன், மற்ற இரு யானைகளும் காயமடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து ஹபரணை - கல் ஓயா ரயில் பாதையில் ஹபரணை ஹதரஸ்கொடுவ பகுதியில் ரயில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொல்லப்பட்ட யானைக்கு 20 வயது இருக்கும் என வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரயிலின் பின் இயந்திரத்தில் சிக்கி யானை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ( யாழ் நியூஸ்)



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.