
பத்தேகம மற்றும் பின்னதுவ ஆகிய இடங்களுக்கு இடையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது பஸ்ஸில் யாத்ரீகர்கள் குழுவொன்று பயணித்துள்ளது. காயமடைந்த பல பயணிகள் மற்றும் பேருந்தின் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேருந்தின் சாரதி ஓட்டிச் செல்லும் போது உறங்கியமையினால் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த பேருந்து வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து சுமார் 100 மீற்றர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)