பிரான்ஸில் இலங்கையர்கள் 14 நபர்களுக்கு சிறைத்தண்டனை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிரான்ஸில் இலங்கையர்கள் 14 நபர்களுக்கு சிறைத்தண்டனை!

வடக்கு பிரான்ஸில் தங்கியிருந்த 14 இலங்கையர்களுக்கு பிரான்ஸ் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

ஐரோப்பா உட்பட பல நாடுகளில் மனிதக் கடத்தல் செயற்பாடுகளை மேற்கொண்டமை காரணமாக அவர்கள் சிறை வைக்கப்பட்டனர்.

இந்த செயற்பாடுகள் தற்போது ஐரோப்பிய கண்டம் முழுவதும் ஒரு இலாபகரமான வர்த்தகமாக மாறியுள்ள குற்றவியல் வலையமைப்புகளை ஒடுக்கும் முயற்சியின் ஒரு கட்டமாகும்.

இந்த மோசடியை மேற்பார்வை செய்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரான்ஸின் செரிஃபோன்டைன் கிராமத்தில் கடையொன்றை நடத்தி வந்த முக்கிய சந்தேக நபருக்கு நான்கு ஆண்டுகள் சிறையும், ஓராண்டு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளின் குடியேற்றவாசிகளை உக்ரேனில் இருந்து ஐரோப்பாவிற்கு கொண்டு செல்வதற்கான கட்டணங்களையும், வழிகளையும் நிர்ணயிப்பதற்காக கிழக்கு ஐரோப்பாவில் உள்ள எல்லை அதிகாரிகளுக்கு குறித்த நபர் லஞ்சம் வழங்கியதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மற்றைய இலங்கையர் ஒருவர் பிரித்தானியாவில் நாடு கடத்தல் உத்தரவுக்கு எதிராக போராடியவர் என்பதுடன், அவருக்கு ஐந்து வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.