உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பில் பிரபலமான 3 இடங்களில் மொட்டு கட்சி இல்லை!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பில் பிரபலமான 3 இடங்களில் மொட்டு கட்சி இல்லை!!!

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பிரபலமான 3 இடங்களில் போட்டியிடுவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) (மொட்டு கட்சி) தீர்மானித்துள்ளது.

கொழும்பு மாநகர சபை, தெஹிவளை - கல்கிசை மாநகர சபை மற்றும் கொலன்னாவ நகர சபை ஆகிய மூன்று உள்ளூராட்சி சபைகளுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கட்டுப்பணத்தை சமர்ப்பித்திருந்த போதிலும் அக்கட்சி வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்த முக்கிய பகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாகவும் அதனால் கட்சியாக போட்டியிடுவதிலிருந்து விலகியுள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மார்ச் 9ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது சனிக்கிழமை (21) மதியம் 12:00 மணியுடன் நிறைவடைந்தது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.