
குறித்த பெண் தனது மகனையும், 08 வயதுடைய மகளையும் விஷம் அருந்துமாறு வற்புறுத்திய பின்னர் தானே விஷத்தை அருந்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மகன் உயிரிழந்துள்ள நிலையில், தாயார் ஆபத்தான நிலையில் வத்துபிட்டிவல வைத்தியசாலையிலும், மகளும் ஆபத்தான நிலையில் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர்களுக்கான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த பெண்ணின் உறவினர்கள், அவர் கடும் கடனில் இருந்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். தலஹேன லொலுவகொட பிரதேசத்தில் வசிக்கும் மூவரைக் கொண்ட குடும்பம் ஆகும்.
சம்பவம் தொடர்பில் நால்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)