தீவிர கடன் - 05 வயது சிறுவன் உயிரிழப்பு

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தீவிர கடன் - 05 வயது சிறுவன் உயிரிழப்பு

தலஹேன பிரதேசத்தில் 05 வயது சிறுவன் ஒருவன் தனது தாயினால் விஷம் அருந்த வற்புறுத்தியதால் உயிரிழந்துள்ளதாக நால்ல பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் தனது மகனையும், 08 வயதுடைய மகளையும் விஷம் அருந்துமாறு வற்புறுத்திய பின்னர் தானே விஷத்தை அருந்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மகன் உயிரிழந்துள்ள நிலையில், தாயார் ஆபத்தான நிலையில் வத்துபிட்டிவல வைத்தியசாலையிலும், மகளும் ஆபத்தான நிலையில் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர்களுக்கான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த பெண்ணின் உறவினர்கள், அவர் கடும் கடனில் இருந்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். தலஹேன லொலுவகொட பிரதேசத்தில் வசிக்கும் மூவரைக் கொண்ட குடும்பம் ஆகும். 

சம்பவம் தொடர்பில் நால்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.