IMF நிதி கிடைப்பது தொடர்பில் அரசின் அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

IMF நிதி கிடைப்பது தொடர்பில் அரசின் அறிவிப்பு!

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிதி வசதிகளை பெற்றுக் கொள்வதற்கு தேவையான அனுமதி 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கிடைக்கும் என நம்புவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவதற்குத் தேவையான அடிப்படை நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், நாட்டின் கடனாளிகளின் உத்தரவாதத்தை சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்ப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

நிதியமைச்சும் மத்திய வங்கியும் இந்தியா மற்றும் சீனாவுடன் கலந்துரையாடி வருவதாகவும், 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அதற்கான அனுமதி கிடைக்குமென நம்புவதாகவும், இதன்மூலம் தங்களால் நிதியினை பெற்றுக்கொள்ள முடியும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்).
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.